
கண்மணி என்
கண்ணின் மணி
காலமெல்லாம் வேண்டும்
உந்தன் மடி
பனி இரவு
பால் நிலவு
குளிர் பொய்கை,
அருகில் நீ இன்றி
எதுவும் சுகிக்கவில்லை
எத்தனை நடு இரவில்
பக்கத்தில் தேடிப்பார்த்து
ஏமாறுவது
காதல் தீ
நெருங்கினால் குளிர்கிறது
விலகினாலோ சுடுகிறது
மலர்ந்தப் பின்
மொட்டாவதில்லை
கட்டவிழ்ந்தப் பின்
காதல் மனம்
கட்டுப்படுவதில்லை
காதோடு உன் குரல்
விழித்தால் உன் முகம்
மார்போடு நீ
நம் இதையங்கள்
உறவாடட்டும்
பிரிவு காதலை
வளர்க்குமாமே
நம் காதல்
வளரவேண்டிய
நிலையில் இல்லை
இனி
உன் பார்வை
படும் தூரம் தாண்டி
ஓர் பயனம் வேண்டாம்
2 comments:
nice
வருகைக்கு நன்றி,
Post a Comment