Tuesday, March 25, 2008

நட்பு

என்னால் முற்களும் மலரும்
எனக்கொன்றென்றால்
மலரும் முள்ளாகும்

முள்ளை முள்ளால் தான்
எடுக்கவேண்டு மென்பார்கள்
நான் மட்டும் தான்
முற்களை பூக்களால் எடுக்கிறேன்

இயந்திர வாழ்க்கையில்
இதையத்திற்க்கு ஒத்திடம்
என்னிடம் கிடைக்கும்

காதலில் கூட
கொடுக்கல் வாங்கல்
உறவுகளோ பந்த பாசம்
உறவுகள் உணர்வுகள் தாண்டி
நேசக்கரம் நீட்டுபவன்
நான் மட்டும் தான்

என் கரம் பற்றிக்கொண்டால்
பயனுண்டா தெரியாது
பயன்பாடு பாராமல்
பழகுபவன் நான்

என்னை பொருத்தவரை
சோற்றுக்கில்லார் கூட
ஏழையில்லை
சோர்ந்த போது -கொஞ்சம்
சாய்ந்து கொள்ள
என் தோள் கிடைக்காதவரே
ஏழை

எனக்கு உருவம் கிடையாது
உணரத்தான் முடியும்
நான் காற்றும் கிடையாது
ஆனால் சுவாசம்

எனக்காக உயிரை விட்டவர்கள் கூட
இன்னும் வாழ்ந்து கொண்டுத்தான் இருக்கிறார்கள்
ஏனென்றால் வாழ்க்கையே நான் தான்

நான் வித்தியாசமான
சிலந்தி வலை
என்னில் விழுந்தவர்களை
நானே காக்கிறேன்

பற்றிக்கொள்ள ஒரு
கொம்பு கண்டவுடன்
சுற்றிக்கொள்வதில்லை நான்
வெட்டிக்கொன்ற போதும்
விட்டு விலகாதிருப்பதும் நானே

ஒளியில் உறவாடி
இருளில் மறையும்
நிழலல்ல நான்
உயிரில் உறவாடி
உன்னோடிருப்பவன்

என் பெயர் சொல்லி
வருபவரெல்லாம் நானில்லை
ஆராயாமல் அனுமதிக்காதீர்கள்

அரிதாரம் இல்லாத
அழகு நான், -என்னை
உங்கள் உச்சந்தலையில்
சூடிக்கொண்டால்
உங்கள் நிழல் கூட
மாற்றான் காலில்
விழ தேவையில்லை

Monday, March 24, 2008

நெஞ்சி பொறுக்குதில்லையே...

செந்தமிழ் நாடெனும் பொழ்தினிலே
வெந்தனல் வந்து பாயுது காதினிலே

குரல் கொடுத்தும் குறைய வில்லை
இலங்கையில் உயிர்பறிப்பின்னும் தீரவில்லை

கடல் கலக்கி களம் புகுவோம்
அந்த சிங்கள காடையர் சிரமறுப்போம்

நம் சிங்கத் தமிழர்க்கு
வாழ்வாளிப்போம்.

Saturday, March 22, 2008

மதம் என்பது..

மனித நேயத்தை
வற்புறுத்தாத
எந்த மதமும்
ஏற்ப்புடையதல்ல..

இந்து மதத்தை சேர்ந்த நபர் முகமதியராக மாறி..

செய்தி: பத்தாண்டுகளுக்கு முன்னாள் ஒரு முறை முகமதியர் நன்பர் ஒருவருடன் தோழுகைக்கு சென்றிறுந்தேன். அன்று இமாம் அவர்கள், உச்ச நீதிபதி ஒருவரின் தீர்ப்பை பற்றி பேசிக்கோண்டிருந்தார். அது, இந்து மதத்தை
சேர்ந்த நபர் முகமதியராக மாறி இரண்டாவது திருமணம் செய்ததைப் பற்றிய தீர்ப்பு. நீதிபதி அவர்கள், நம் நாட்டில் பொதுவான சட்டம் இல்லாததால் அந்த நபரை தண்டிப்பதில் இருக்கும் சிரமத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார். இமாம் அவர்களோ, "ஷரியத் இறைவனாள் வழங்கப்பட்டது அதில் மாற்றம் செய்யமுயன்றால் அதை உயிரை கொடுத்தும் தடுப்போம்" என்று பேசிக்கோண்டிருந்தார்,..
அப்போது, எனக்கு பின்னால் இருந்து ஒரு குரல், "ஷரியத்தை மட்டும் சொல்லி கொடுங்கள், நீதிபதி ஒருவரின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க வேண்டாம்" என்றது, அந்த குரலுக்குரியவர் வழக்கறினர்-நடிகர் மம்முட்டி அவர்கள்.

Monday, March 17, 2008

ஈழம்

திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.
தமிழர்க்கோர்
தனி நாடெனும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

இனி சூரியன்
சிவப்பாய் எழ
ஒரு காரணம்
கிடையாதென,
மயில் ஆடிடும்
குயில் பாடிடும்.
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

அமுதாய் ஒரு
ஒளிவீசிடும்
புது சூரியன்
அன்றெ எழும்
அலையோடெழும்.

புலியாய் இவர்
புறப்பட்டார்
எலியாய் சிலர்
எதிர்பட்டார்
ஒரு மிதியால்
அவர் புறமிட்டார்
என
உன் பிள்ளையும்
என் பிள்ளையும்
கைகோர்த்தொரு
பண்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.

இனிதாய் ஒரு
கவிபாடியே
கவியோர் பலர்
கலந்தாடியே
பணிவாய்
அவர்
புகழ்பாடிடும்
திருநாள் வரும்
ஒரு நாள் வரும்.