எத்தனைப் புயல்
எத்தனைப் பூகம்பங்கள்
எத்தனை எத்தனை யூகமாய்
எத்தனைப் போர்
எத்தனை இரத்தம்.
எத்தனை எழுப்சி
எத்தனை வீழ்ச்சி.
உங்கள் கண்களில்
நீரும் உண்டு
நெருப்பும் உண்டு.
உங்கள் வார்த்தைகளில்
சண்டையம் உண்டு
சமாதானமும் உண்டு.
உங்கள் நெஞ்சிக்குழிக்குள்
அமுதும் உண்டு
நஞ்சும் உண்டு.
உறவும் பகையும்
உங்கள் கைகளில்.
உங்களால் காயம்பட்டவர்கள்
புன்னகைத்திருக்கிறார்கள்,
உங்கள் புன்னகையால்
எத்தனையோப்பேர்
காயம்பட்டுருக்கிறார்கள்.
சித்தர்கள் கூட
சித்தம் கலங்கி
பித்தர்கலானார்கள்.
உலகின் மிகப் பெரியப் பூ
பெண்களே
உலகின் வலிமையான ஆயுதமும்
பெண்களே.
நீங்களும் சமுத்திரமும் ஒன்றுதான்
உங்களில் அமிழ்ந்து கிடப்பவை
யாவும் அறிந்தவர் யாருமில்லை.
நீங்களும் வானமும் ஒன்றுதான்
உங்களின் எல்லைகளைக் கண்டவர்
யாருமில்லை.
உயிரின் அத்தியாவசியம் நீங்கள்
உயிர்க் கொல்லிகளும்
நீங்கள் தான்.
ஒவ்வொருவர் வெற்றிக்குப் பின்னாலும்
நீங்கள் இருக்கிறீர்கள்
ஒவ்வொருவரின் தோழ்விக்குப் பின்னாலும்
நீங்களே இருக்கிறீர்கள்.
உயிரைக் கொடுப்பதும்
நீங்கள்தான்
பேணி வளர்ப்பதும்
நீங்கள்தான்
அழித்தொழிப்பதும்
நீங்கள்தான்.
படைத்தல்
காத்தல்
அழித்தல்
யாவும் பெண்ணென்றால்
ஆண்டவன்
என்பது
யார்
இங்கே.
Monday, May 26, 2008
Friday, May 23, 2008
மன்னிச்சுக்கங்க, இது ஆண்களுக்கு மட்டும் (நம்ம சீனா நன்பர் சொன்னது)
இருவது வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு போருந்தாது.
20(வயது) x9 = 18; ( 10 நாட்களுக்கு 8 முறை)
30(வயது)x9 =27; (20 நாட்களுக்கு 7 முறை)
40(வயது)x9 =36; (30 நாட்களுக்கு 6 முறை)
50(வயது)x9 =45 ( 40 நாட்களுக்கு 5 முறை)
60(வயது)x9 =54 ( 50 நாட்களுக்கு 4 முறை)
70(வயது)x9 =63 ( 60 நாட்களுக்கு 3 முறை)
80(வயது)x9 =72 ( 70 நாட்களுக்கு 2 முறை)
90(வயது)x9 =81 (80 நாட்களுக்கு 1 முறை)
100(வயது)x9=90 -ஆட்டத்தில் இல்லை
20(வயது) x9 = 18; ( 10 நாட்களுக்கு 8 முறை)
30(வயது)x9 =27; (20 நாட்களுக்கு 7 முறை)
40(வயது)x9 =36; (30 நாட்களுக்கு 6 முறை)
50(வயது)x9 =45 ( 40 நாட்களுக்கு 5 முறை)
60(வயது)x9 =54 ( 50 நாட்களுக்கு 4 முறை)
70(வயது)x9 =63 ( 60 நாட்களுக்கு 3 முறை)
80(வயது)x9 =72 ( 70 நாட்களுக்கு 2 முறை)
90(வயது)x9 =81 (80 நாட்களுக்கு 1 முறை)
100(வயது)x9=90 -ஆட்டத்தில் இல்லை
Tuesday, May 20, 2008
Monday, May 19, 2008
என் எழுத்துக்களின் கொஞ்சம் வன்முறை நெடி...
என் எழுத்துக்களின் கொஞ்சம் வன்முறை நெடி இருப்பதாக வருத்தப்பட்ட நன்பனே, அகிம்சைக்கான வரையறை எல்லாம் மாறிப்போனதை அறியாயோ?. ஒரு கண்ணத்தில் அடித்தால் மறுகண்ணத்தைக்காட்டாதே, மீண்டும் அடிபடுவாய். மோதி மிதித்திட்டிப் பாப்பா என உன் பிள்ளைக்குச் சொல்லிக்கொடு, நீயும் ரோத்திரம் பழகு. எனென்றால்,"வன்முறைக் எதிராக நடத்தப்படுகிற வன்முறை அகிம்சை தான், வன்முறையை சகித்துக்கொள் என்கிற அகிம்சையும் வன்முறை தான்."

ஓடப்பரெல்லாம் உதையப்பராகிவிட்டால்..... ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா.
ஓடப்பரெல்லாம் உதையப்பராகிவிட்டால்..... ஒப்பப்பர் ஆகிடுவார் உணரப்பா.
Sunday, May 18, 2008
ஒரு நல்ல மருத்துவர் பற்றி சொல்லப்போகிறேன்
பொதுவாக வானம் பார்த்த பூமி, பெரும்பாலும் சிறு விவசாயி அல்லது விவசாய கூலிகள், வறுமை, அறியாமை, மூடநம்பிக்கை இப்படி எல்லா விதத்திலும் சபிக்கப்பட்ட மழைவாழ் மக்கள் வாழும் இடம் தான், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிட்லிங்கி எனும் கிராமம். மருத்துவமனை என்றால் 50 கிலோ மீட்டர் பயணித்து அரூர் தான் போகவேண்டும், 1993ல் ஒரு நாளைக்கு மூன்று முறை தான் பேருந்து வந்து செல்லும், இன்றைக்கும் 5 அல்லது 6 முறை தான் பேருந்து வந்து செல்கிறது என்பது வேறுவிடையம். 90-களில், சிட்லிங்கி மற்றும் சுற்று வட்டத்தில் நூற்றுக்கு பதினைந்து பிள்ளைகள் தன் முதல் பிறந்த நாளை கொண்டாடும் முன்னே இறந்துப் போனார்கள். இந்த பாவப்பட்ட மக்களுக்காகவே 1993ல் வந்து சேர்ந்தனர் மருத்துவ தம்பதியர் ரெகி சார்சி (Regi George) மற்றும் லலிதா சார்சி (gynaecologist). எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கடுமையாக போராடி, உண்மையாக உழைத்ததால் சிறு சிறு பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெற்று மருத்துவமனையை அமைத்து மக்கட்பணியாற்றி வருகிறார்கள். Reader's Digest இவர்களை பற்றி 2001 செப்டெம்பரில் sittilingi's Good Doctors என்ற தலைப்பில் கவர் ஸ்சொரி மற்றும் மருத்துவ தம்பதியர் படங்களையும் அட்டைப்பட செய்தியாக வெளியிட்டு பெறுமை தேடிக்கொண்டது. இன்றைக்கு தினமும் நூற்றுக்கனக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்களென்றாலும், வேலை பளுவை பகிர்ந்துக்கொள்ள வேறு எந்த மருத்துவரும் யாரும் இது வரை முன்வரவில்லை என்பது துயரமே. இவர்களை பற்றி தெரிந்துக்கொள்ள, முடிந்த உதவி செய்திட பார்வையிடவும் http://www.tribalhealth.org/ .
Thursday, May 1, 2008
ஞாநியின் சூழ்ச்சியும், திருமாவின் நேர்மையும் வீரமும்
சமீபத்தில் குமுதம்.காமில் விடுதலைச் சிருத்தைகள் அமைப்பின் தலைவர் திரு. திருமாவளவன் அவர்களின் செவ்வியை, "ஞாநி பேசுகிறேன்" என்ற நிகழ்ச்சியில் காணநேர்ந்தது. அதில், பிரபாகரன் என்ற திரைப்படத்தை இயக்கிய சிங்கள இயக்குநரின் கருத்துச் சுதந்திரத்தை தடுப்பது நியாயமா ? என்று ஞாநி அவர்கள் வாதாடினார். ஞாநியின் சூழ்ச்சியும், திருமாவின் நேர்மையும் வீரமும் அந்த உறையாடலில் நன்றாகத் தெரிந்தது. பொய்யான புராணங்கள் எழுதி ஒரு சமுதாயத்தையே ஏமாற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வயிறு வளர்த்தவர்களிடம் இதைத்தான் எதிர்ப்பார்க்க முடியும் என்பது உண்மை. நிகழ்ச்சியின் முடிவில், கவிஞர் அண்ணன் அறிவுமதி அவர்கள் தன் இனைய தளத்தில் சமிபத்தில் எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வந்தது. அவை,
"எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் ! இல்லை.. இல்லை…அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம். (http://arivumathi.wordpress.com/).
"எங்கள் வீட்டுக்குள் எங்கள் பெண்களைக் கெடுக்க வருகிற மிருகங்களின் ஆண்குறிகளை வெட்ட வேண்டும் என்பது எங்களின் ஆத்திரம் ! இல்லை.. இல்லை…அந்தக் குறிகளுக்கு ஆணுறைகள் மாட்டிவிட வேண்டும் என்பது உங்களின் சாத்திரம். (http://arivumathi.wordpress.com/).
Subscribe to:
Posts (Atom)